அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
❖ பன்னிரு பாட்டியல் - வெண்பாப் பட்டியல்
❖ சிவஞான போதம் பேருரை - சிவஞான மாபாடியம்
❖ இலக்கண விளக்கம் - குட்டித் தொல்காப்பியம்
❖ திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி - குட்டித் திருவாசகம்
❖ ஏலாதி - குட்டி
திருக்குறள்
❖ பெருங்கதை - கொங்கு வேளிர் மாக்கதை
❖ கம்பராமாயணம் - வழிநூல்
❖ சிலப்பதிகாரம் - தமிழின் முதல் காப்பியம், முதல் நூல், முத்தமிழ்க் காப்பியம், வரலாற்றுக் காப்பியம்,
சமுதாயக் காப்பியம், தமிழரின் தேசியக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், நாடகக் காப்பியம்,
வழிநூல் என்னும் நூல் வகையுள் முதல் நூல்.
❖ மணிமேகலை - மணிமேகலைத் துறவு
❖ சீவகசிந்தாமணி - மண நூல்
❖ நீலகேசி - நீலம், நீலகேசித் தெருட்டு
❖ கலிங்கத்துப்பரணி - தென்தமிழ் தெய்வப்பரணி
❖ திருக்கோவையார் - இராசாக் கோவை
❖ குறவஞ்சி - குறம், குறவஞ்சி நாடகம், குறவஞ்சி நாட்டியம்
❖ உலா - உலாப்புறம்
❖ தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்
❖ இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
❖ இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
❖ இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்
❖ இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை
❖ இயற்கை தவம் – சீவகசிந்தாமணி
❖ இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
❖ இயற்கை அன்பு - பெரிய புராணம்
❖ இயற்கை இறையருள் - தேவாரம், திருவாசகம், திருவாய்மொழிகள்
❖ கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
❖ புறநானூறு - நூற்றைம்பது கலி
❖ பட்டினப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு
❖ பரிபாடல் - பரிப்பாட்டு
❖ மலைபடுகடாம் - கூத்தராற்றுப்படை
❖ திருமுருகாற்றுப்படை - முருகு, புலவராற்றுப்படை
❖ முல்லைப்பாட்டு - நெஞ்சாற்றுப்படை
❖ திருக்குறள் - முப்பால், முப்பானூல், தெய்வ நூல், தமிழ் மறை, பொய்யாமொழி, வாயுரை வாழ்த்து,
பொதுமறை, உத்திரவேதம், திருவள்ளுவப் பயன்,ஈரடி வெண்பா
❖ நாலடியார் - நாலடி நானூறு, வேளாண் வேதம்
❖ முதுமொழிக் காஞ்சி - அறவுரைக் கோவை
❖ கைந்நிலை - ஐந்திணை அறுபது
❖ திருப்பாவை - பாவைப்பாட்டு
❖ திருவாய்மொழி - திராவிட வேதம்
❖ பெரிய புராணம் - அறுபத்து மூவர் புராணம், திருத்தொண்டர் புராணம்
❖ நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் - திராவிட வேதம், வைணவர்களின் தமிழ் வேதம்
❖ திருமந்திரம் - தமிழ் மூவாயிரம்
❖ கருணாமிர்த சாகரம் - இசை பேரிலக்கணம்
❖ மூதுரை - வாக்குண்டாம்
❖ வெற்றி வேற்கை - நறுத்தொகை
❖ நேமிநாதம் - சின்னூல்
❖ திருக்கயிலாய ஞான உலா - ஆதியுலா, ஞானஉலா
❖ பழமொழி - மூதுரை, முதுமொழி, உலக வசனம், பழமொழி நானூறு
Post a Comment
Post a Comment