தமிழ்மொழி - கூற்றும் கூறியவரும்
❖ தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு
– நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப்பிள்ளை
❖ தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லாட - நாமக்கல் கவிஞர்
❖ கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
- நாமக்கல் கவிஞர்
❖ கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை
ஒத்துக் கொள் - நாமக்கல் கவிஞர்
❖ அமிழ்தம் அவளுடைய மொழியாகும் அன்பே அவளுடைய வழியாகும்
மானம் பெரிதென உயிர் விடுவார் - நாமக்கல் கவிஞர்
❖ தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு
- நாமக்கல் கவிஞர்
❖ பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின்
விசை தீர வேண்டும் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
பிள்ளை
❖ சூதினும் சூதானது யாதெனிள் சூதினும் சூதே சூதா
னது - பம்மல் சந்மந்தனார்
❖ எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - அறிஞர் அண்ணா
❖ கடமை, கண்ணியம். கட்டுப்பாடு - அறிஞர் அண்ணா
❖ மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு - அறிஞர் அண்ணா
❖ உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது
ஒற்றுமையில்லா மனித குலம் உயர்வு தாழ்வு வளக்குது - பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார்
❖ செய்யும் தொழிலே
தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம் - பட்டுக்கோட்டை
கலியாணசுந்தரனார்
❖ வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்
முதல் உயிர் மொழி - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
❖ ஏர்முனைக்கு நிகரிங்கே எதுவுமில்லை - மருதகாசி
❖ செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன் வண்ணச்
சந்தத்திலே கவிதைச் சரம் தொடுப்பேன் - கண்ணதாசன்
❖ எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை
இல்லாத நிலை வேண்டும் - கண்ணதாசன்
❖ நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை - கண்ணதாசன்
❖ போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர்
தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன் ஏற்றதொரு கருத்தை என்துள்ளம் என்றால் எவர்வரினும் நில்லேன்
அஞ்சேன் - கண்ணதாசன்
❖ ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னைமொழி
பேசுதற்கு நாணுகின்ற தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி!
- முடியரசன்
❖ நான் தனியாக வாழவில்லை. தமிழோடு வாழ்கிறேன் - திரு.வி. கலியாண சுந்தரனார்
❖ பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு
வயல் வரப்பு வழுக்கி இறந்தவனும் உண்டு - பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர்
❖ ஆசையே துன்பத்திற்குக் காரணம் - புத்தர்
❖ கற்றுணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை
யாவது நமச்சிவாயவே - திருநாவுக்கரசர்
❖ என் கடன் பணி செய்து கிடப்பதே - திருநாவுக்கரசர்
❖ நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ஏமாப்போம்
பிணியறிவோம் பணிவோம் அல்லோம் - திருநாவுக்கரசர்
❖ குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்
சிரிப்பும் - திருநாவுக்கரசர்
❖ அடியவர்க்கும், அடியவர்க்கும், அடியவர்க்கும் அடியேன்
யான் - நம்மாழ்வார்
❖ வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் : மெய் கூறுவல்
- மருதனில் நாகனார்
❖ செல்வத்துப்பயனே ஈதல் - நக்கீரர்
❖ ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேனென்றால்
அதனினும் இழிந்தன்று கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும்
உயர்ந்தன்று - கழைதின் யானையார் (புறநானூறு)
❖ கோல்நோக்கி வாழும் குடிபோல் இருந்தேன் - குலசேகர ஆழ்வார்
❖ செல்வத்துப் பயனே ஈதல் - நக்கீரர்
❖ நூல் பல கல் – ஒளவையார்
❖ இளமையில் கல் - ஒளவையார்
❖ நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - ஒளவையார்
❖ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - ஒளவையார்
❖ அணுவைத் துளைத்தேழ் கடலையும் குறுகத் தறித்தக்
குறள் - ஒளவையார்
❖ திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - ஒளவையார்
❖ மீதூண் விரும்பேல் - ஒளவையார்
❖ இயல்வது கரவேல் - ஒளவையார்
❖ நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே - ஒளவையார்
❖ ஈவது விலக்கேல் - ஒளவையார்
❖ எறும்பும் தன் கையால் எண்சாண் - ஒளவையார்
❖ கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு - ஒளவையார்
❖ மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை
கோடியுறும் உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடியுறும் கோடி கொடுத்தும்
குடிப்பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடியுறும் கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கோடாமை
கோடியுறும் - ஒளவையார்
❖ காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக் கட்டி அரிசி
அவள் அமைத்துக் வாயுடை மறையவர் மந்திரத்தால் - ஆண்டாள்
❖ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - திருவள்ளுவர்
❖ நீரின்றி அமையாது உலகு - திருவள்ளுவர்
❖ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - திருவள்ளுவர்
❖ நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் - திருமூலர்
❖ உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் - திருமூலர்
❖ உடம்பார் அழியின் உயிரார் அழிவர் - திருமூலர்
❖ ஒன்றே குலம் ஒருவனே தேவன் - திருமூலர்
❖ உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் - திருமூலர்
❖ என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத்
தமிழ் செய்யுமாறு - திருமூலர்
❖ வைதோரைக் கூட வையாதே - இந்த வையம் முழுதும் பொய்த்தாலும்
பொய்யாதே - காடுவெளிச்சித்தர்
❖ முப்பால் அறிந்த முதற்பா விலர் ஒப்பார் எப்பா பலரினும்
இல் – நல்லந்துவனார்
❖ கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை
நன்றே - அதிவீரராம பாண்டியன்
❖ திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் ஞாயிறு
போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்
❖ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை
முனியாது கற்றல் நன்றே ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோனா றரசும் செல்லும் என்று பாடியவர் - பாண்டியன் நெடுஞ்செழியன்
❖ பரணிக்கோர் ஜெயங்கொண்டான் - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
❖ தென்றமிழ் தெய்வப் பரணி - ஒட்டக்கூத்தர்
❖ தீதும் நன்றும் பிறர் தரவ வாரா - கணியன் பூங்குன்றனார்
❖ பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய மாமலைப் பயந்த
காமருமணியும் - புறநானுறு
❖ பசித்திரு, தனித்திரு, விழித்திரு - வள்ளலார்
❖ அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை - வள்ளலார்
❖ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் - வள்ளலார்
❖ கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக வேண்டும்
- வள்ளலார்
❖ ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர்
ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் - வள்ளலார்
❖ உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் - வள்ளலார்
❖ சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன்
இவையெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு - வள்ளலார்
❖ எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல்
எண்ணி உள்ளே - வள்ளலார்
❖ கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் எண்ணில்
கலந்தே இருக்கின்றான் - வள்ளலார்
❖ பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் எண்ணுற வகுத்த
அருட்பெருஞ்சோதி - வள்ளலார்
❖ மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை
ஒரு சிறிதெனினும் கண்ணுற பார்த்தும் செவியுற கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்
- வள்ளலார்
❖ கலையுணர்ந்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் வழக்கமெல்லாம்
மண்மூடிப் போக - வள்ளலார்
❖ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு களவாமை
வேண்டும் - வள்ளலார்
❖ எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன் றறியேன் பராபரமே – வள்ளலார்
❖ அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த இன்பப்
பெருக்கே இறையே பராபரமே - வள்ளலார்
❖ ஓர் அணுவினைச் சதக்கூறிட்ட கோணினும் உளன் - கம்பர்
❖ உடம்பிடைத் தோன்றிற் றொன்றை அறிந்ததுன் உதிரமூற்றி
அடல்உறச் சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் - கம்பர்
❖ கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் - ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்
❖ வாலெங்கே நீண்டு எழுந்த வல்லுகி ரெங்கே? நாலு காலெங்கே?
ஊன் வடிந்த கண்ணெங்கே? - கவிகாளமேகம்
❖ நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் - பாரதியார்
❖ காக்கை குருவி எங்கள் ஜாதி - பாரதியார்
❖ காக்கைச் சிறகினிலே நந்தலாலா - பாரதியார்
❖ பெண் விடுதலை வேண்டும் - பாரதியார்
❖ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - பாரதியார்
❖ எல்லோரும் இந்நாட்டு மன்னர் - பாரதியார்
❖ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள்
வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் - பாரதியார்
❖ பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும்
நனிசிறந்தனவே - பாரதியார்
❖ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - பாரதியார்
❖ நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் - பாரதியார்
❖ தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்
- பாரதியார்
❖ செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்
- பாரதியார்
❖ உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - பாரதியார்
❖ பாரத நாடு பழம் பெரும் நாடு நீர் அதன் புதல்வன்
இந்நினைவு அகற்றாதீர் - பாரதியார்
❖ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும்
காணோம் - பாரதியார்
❖ சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் - பாரதியார்
❖ காவிரி தென்பெண்ணை பாலாறு கண்டதோர் வையை பொருநை
நதி - பாரதியார்
❖ கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த
தமிழ்நாடு – பாரதியார்
❖ நஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த
தமிழ்நாடு - பாரதியார்
❖ யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவன் போல்
இளங்கோவனைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை - பாரதியார்
❖ வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு - பாரதியார்
❖ தனியொருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்
- பாரதியார்
❖ கம்ப நாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே
- பாரதியார்
❖ ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன
நீதி - பாரதியார்
❖ பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு நாமிருக்கும்
நாடு நமது என்பதறிந்தோம் - பாரதியார்
❖ காசிநகர்ப் புலவன் பாடும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர்
கருவி செய்வோம் - பாரதியார்
❖ வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்
பயிர் செய்குவோம் - பாரதியார்
❖ ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து
விட்டோம் என்று - பாரதியார்
❖ வாழிய செந்தமிழ்! வுhழிய நற்றமிழர்! - பாரதியார்
❖ செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்துபாயுது
காதினிலே - பாரதியார்
❖ பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற்
பெயர்த்தல் வேண்டும் - பாரதியார்
❖ இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல்
வேண்டும் - பாரதியார்
❖ வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம் மேலைக் கடல்
முழுதும் கப்பல் விடுவோம் - பாரதியார்
❖ தேடிச்சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள்
பேசி நான் வீழ்வேனென்று நினைத்தாயோ - பாரதியார்
❖ அறம் பெருகும் தமிழ் படித்தால், அகத்தில் ஒளி பெருகும்
திறம் பெருகும் உரம் பெருகும் தீமைக் கெதிர் நிற்கும் - பெருஞ்சித்திரனார்
❖ கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தனர் குடிக்கத்தான்
கற்பித் தானா? - இராமச்சந்திரக் கவிராயர்
❖ செத்தும் கொடுத்த சீதக்காதி - படிக்காசுப் புலவர்
❖ தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன்
❖ புதியதேர் உலகம் செய்வோம் - பாரதிதாசன்
❖ எங்கெங்கு காணினும் சக்தியடா – பாரதிதாசன்
❖ வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையமே - பாரதிதாசன்
❖ கொலை வானினை எடுடா வெகு கொடியோர் செயல் அறவே -
பாரதிதாசன்
❖ இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கிறது என்பவனும்
இருக்கின்றானே - பாரதிதாசன்
❖ கல்வி இல்லாத பெண் களர் நிலம் போன்றவள் - பாரதிதாசன்
❖ எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள்
ஒன்றாதல் கண்டே - பாரதிதாசன்
❖ திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும் மங்குன்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் - பாரதிதாசன்
❖ வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே - பாரதிதாசன்
❖ அகர முதலி ஒன்றை நாளும் படித்து வருவாய் நகரிலாத
சொற்கள் நினைவில் நன்கு பெறுவாய் - பாரதிதாசன்
❖ மழையே மழையே வா வா – நல்ல வானில் புனலே வா வா
- இவ் வையத் தமுதே வா வா - பாரதிதாசன்
❖ தௌ;ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள் இணையில்லை
முப்பாலுக்கு இந்நிலத்தே - பாரதிதாசன்
❖ தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக் குகையில் சிறுத்தை எழும் - பெரியார் பற்றி பாரதிதாசன்
❖ உள்ளத் துள்ளது கவிதை இன்பம் உருவெடுப்பது கவிதை
- கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை
❖ வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசுதென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு - கவிமணி
❖ மங்கைய ராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட
வேண்டு மம்மா - கவிமணி
❖ தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக்
குதிக்குது கன்றுக்குட்டி - கவிமணி
❖ தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம்
- கவிமணி
❖ சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும் சாலைகளிலே
தமிழ் எழுந்து முழங்க வேண்டும் - கவிமணி
❖ கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை
மணியாகத் தொடுத்தவனும் நீதானோ - கவிமணி
❖ காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப்போவானே – கவிமணி
❖ நாடக சாலையொத்த நற்கலாசாலை ஒன்று நீடுலகில் உண்டோ
நிகழ்த்து - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
Post a Comment
Post a Comment