அடைமொழியால் குறிக்கப்பெறும் புலவர்கள்
❖ அகத்தியர் - குறுமுனி
❖ இளம்பூரணர் - உரையாசிரியர், உரையாசிரியச் சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர்
❖
நச்சினார்க்கினியர் - உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர்
❖ கபிலர் - புலனழுக்கற்ற அந்தணாளன், நல்லிசைக் கபிலன், பொய்யா நாவின் கபிலர்
❖ திருவள்ளுவர் - முதற்பாவலர், பெருநாவலர், தெய்வப்புலவர், செந்நாப்போதார், நாயனார், மாதானுபங்கி,
தேவர், நான்முகனார், பொய்யில்புலவர்
❖ திருஞானசம்பந்தர் - தோடுடைய செவியன், காழி வள்ளல், தோணுபுரத் தென்றல், திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை
❖ திருநாவுக்கரசர் - அப்பர், தாண்டக வேந்தர்,வாகீசர், மருள் நீக்கியார், தேசம் உய்ய வந்தவர்
❖ சுந்தரர் - வன்தொண்டர், தம்பிரான் தோழர், நாவலூரார்
❖ மாணிக்கவாசகர் - அழுது அடியடைந்த அன்பர்
❖ சேக்கிழார் - அருண்மொழித்தேவர், உத்தமசோழ பல்லவராயன், தெய்வச் சேக்கிழார், தொண்டர் சீர்
பரவுவார்
❖ பெரியாழ்வார் - பட்டர் பிரான், வேயர்கோன், விஷ்ணுசித்தர்
❖ ஆண்டாள் - சூடிக்கொடுத்த நாச்சியார், வைணவம் தந்த செல்வி, கோதை
❖ நம்மாழ்வார் - சடகோபன், காரிமாறன், தமிழ்மாறன், பராங்குசன், வகுளபூணன்
❖ குலசேகராழ்வார் - கூடலர்கோன், கொல்லிகூவலன்
❖ திருமங்கையாழ்வார் - பரகாலன், கலியர், மங்கை வேந்தர், திருமங்கை மன்னர், நாலுகவிப் பெருமாள், வேதம்
தமிழ் செய்த மாறன், ஆலிநாடன்
❖ திருமழிசையாழ்வார் - திராவிட ஆச்சாரியார்
❖ தொண்டரடிப் பொடியாழ்வார் - விப்பிரநாராயணன்
❖ நம்பியாண்டார் நம்பி - தமிழ் வியாசர்
❖ ஒளவையார் - தமிழ் மூதாட்டி
❖ திருமூலர் - முதல் சித்தர்
❖ கம்பர் - கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவர்
❖ சீத்தலைச் சாத்தனார் - தண்டமிழாசான், சாத்தன் நன்னூற் புலவன்
❖ திருத்தக்கத் தேவர் - தமிழ்ப் புலவர்களுள் இளவரசர்
❖ புகழேந்தி - வெண்பாவிற் புகழேந்தி
❖ மீனாட்சி சுந்தரம் பிள்ளை - மகாவித்வான்
❖ திரிகூட ராசப்பக் கவிராயர் - திருக்குற்றால நாதர், கோயில் வித்வான்
❖ மாயூரம் வேதநாயகம் பிள்ளை - நீதியரசர்
❖ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் - அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி, தெய்வக்கவிஞர்
❖ இராமலிங்க அடிகளார் - வள்ளலார், அருட்பிரகாசர், ஓதாது உணர்ந்த பெருமாள், சன்மார்க்கக்கவி, வடலூரார்,
இறையருள் பெற்ற திருக்குழந்தை
❖ பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர், புதுமைப்கவிஞர்
❖ இரட்டைப்புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்
❖ உ.வே.சாமிநாதய்யர் - தமிழ்த்தாத்தா, மகாமகோபாத்தியாய
❖ பாரதியார் - மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை, விடுதலைக் கவி,
மக்கள் கவி, தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி, நீடுதுயில் நீக்கப்பாடிவந்த நிலா, எட்டயபுரத்துக்
கவி, புதுக்கவிதையின் தந்தை
❖ சிவப்பிரகாசர் - கற்பனைக் களஞ்சியம்
❖ வெ.ராமலிங்கம் பிள்ளை - நாமக்கல் கவிஞர்
❖ பெருஞ்சித்திரனார் - பாவலரேறு
❖ அழ. வள்ளியப்பா - குழந்தைக் கவிஞர்
❖ திரு.வி.கலியாணசுந்தரனார் - திரு.வி.க. தமிழ்த்தென்றல்
❖ புதுமைப்பித்தன் - சிறுகதை மன்னன்
❖ சோமசுந்தர பாரதியார் - நாவலர்
❖ இராபர்ட்-டி-நொபிலி - தத்துவ போதகர்
❖ வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி - பரிதிமாற் கலைஞர்
❖ வால்டர் ஸ்காட் - உலகச் சிறுகதையின் தந்தை
❖ இராசா. அண்ணாமலைச் செட்டியார் - தனித்தமிழ் இசைக் காவலர்
❖ டி.கே.சி - ரசிகமணி
❖ தேவநேயப் பாவாணர் - மொழி ஞாயிறு, செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர்
என 174 சிறப்புப் பெயர்கள்
❖ உடுமலை நாராயண கவி - பகுத்தறிவுக் கவிராயர்
❖ அஞ்சலையம்மாள் - தென்நாட்டின் ஜான்சிராணி
❖ அம்புஜத்தம்மாள்
- காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்
❖ கந்தசாமி - நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை
❖ சங்கரதாசு சுவாமிகள் - நாடகத் தமிழ் உலகின் இமயமலை, தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
❖ வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் - பிற்கால உரையாசிரியர்ச் சக்கரவர்த்தி
❖ பரிதிமாற்கலைஞர் - திராவிட சாஸ்திரி, தமிழ் நாடகப் பேராசிரியர், சூரியநாராயண சாஸ்திரி
❖ பம்மல் சம்பந்தனார் - தமிழ் நாடகத் தந்தை
❖ ஜெயகாந்தன் - தமிழ்நாட்டின் மாப்பஸான்
❖ வாணிதாசன் - தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த், கவிஞரேறு, பாவலர் மணி
❖ அநுத்தமா - தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின்
❖ கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை - முத்தமிழ்க் காவலர்
❖ டி.கே. சண்முகம் சகோதரர்கள் - தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை
❖ இரா.பி. சேதுப்பிள்ளை - சொல்லின் செல்வர்
❖ வ.உ. சிதம்பரனார் - கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்
❖ ஈ.வெ. ராமசாமி - பெரியார், பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர், வெண்தாடி வேந்தர் மூதறிஞர்
❖ இராஜாஜி - மூதறிஞர்
❖ நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் - காந்தியக் கவிஞர்
❖ காமராஜர் - பெருந்தலைவர், கல்விக் கண் திறந்தவர்
❖ அருணகிரிநாதர் - சந்தக்கவி
❖ பொ.வே. சோமசுந்தரனார் - பெருமழைப்புலவர்
❖ மு. கதிரேசச் செட்டியார் - மகோமகோபாத்தியாய, பண்டிதமணி
❖ கருமுத்து தியாகராசச் செட்டியார் - கலைத்தந்தை
❖ ஆறுமுக நாவலர் - பதிப்புச் செம்மல்
❖ சி.பா. ஆதித்தனார் - தமிழர் தந்தை
❖ கா. அப்பாத்துரையார் - பன்மொழிப்புலவர்
❖ பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் - பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர்
❖ ம.பொ. சிவஞானம் - சிலம்புச் செல்வர்
❖ சுந்தர ராமசாமி – பசுவய்யா
❖ மாதவய்யர் - கோணக் கோபாலன்
❖ வேங்கடரமணி - தென்னாட்டுத் தாகூர்
❖ சுரதா - உவமைக்கவிஞர்
❖ கண்ணதாசன் - காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, கமகப்பிரியன்
❖ கல்கி - தமிழ்நாட்டின்
வால்டர் ஸ்காட்
❖ சுஜாதா - தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ்
❖ கி.வா ஜெகந்நாதன் - தமிழறிஞர்
❖ அண்ணாதுரை - பேரறிஞர், அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா
❖ வி.முனுசாமி - திருக்குறளார்
❖ பாலசுப்ரமணியன் - சிற்பி
❖ நா. காமராசன் - வானம்பாடிக் கவிஞர்
❖ ஸ்ரீவேணுகோபாலன் - புஷ்பா தங்கதுரை
❖ ஆத்மாநாம் - எஸ்.கே. மதுசூதன்
❖ என்.எஸ். கிருஷ்ணன் - கலைவாணர்
❖ எம்.ஜி. ராமச்சந்திரன் - மக்கள் திலகம், எம்.ஜி.ஆர், புரட்சி நடிகர், இதயக்கனி
❖ மு. கருணாநிதி - கலைஞர்
❖ எம்.ஆர். ராதா - நடிகவேள்
❖ எம்.எஸ். சுப்புலட்சுமி - இசைக்குயில்
❖ செய்குத்தம்பி பாவலர் - கற்பனைக் களஞ்சியம்
❖ வேதரத்தினம் பிள்ளை - சர்தார்
❖ அண்ணாமலை ரெட்டியார் - அண்ணாமலை கவிராஜன்
❖ திரு.வி.க - தற்கால தமிழ் உரைநடையின் தந்தை
❖ வைரமுத்து - கவிப்பேரரசு
❖ வா.செ. குழந்தைசாமி - குலோத்துங்கன்
❖ அப்துல் ரகுமான் – கவிக்கோ
Post a Comment
Post a Comment