இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாட்டில் பெண்களின் பங்கு
வேலு நாச்சியார்:
*ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி
*இவர் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள்.
*சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரை மணந்தார்.
*1772இல் ஆங்கிலேயருக்கும் முத்துவடுக நாதருக்கும் ஏற்பட்ட போரில் முத்துவடுக நாதர் வீரமரணம் அடைந்தார்.
*பின்பு வேலுநாச்சியாரே தலைமை ஏற்று போர் புரிந்தார்.
*வேலு நாச்சியாருக்கு உதவியவர் மைசூர் மன்னர் ஹைதர் அலி. இவர் 5000 படை வீரர்களை உதவிக்கு அனுப்பினார்.
*1780ஆம் ஆண்டு தம் கணவரை கொன்றவார்களைக் வென்று மீண்டும் சிவகங்கையை மீட்டார்.
கடலூர் அஞ்சலைஅம்மாள்
* இவர் 1890 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்.
* 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய பொது இவரும் தம் பொதுவாழ்கையை தொடங்கினார்.
*நீலம் சிலையை அகற்றும் போராட்டம் உட்பட பல போராட்டங்களில் பங்கு பெற்று சிறைக்கு சென்றார்
*வேலூர் சிறையில் இருந்த போது, கருவுற்ற நிலையில் இருந்த இவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
*நீலம் சிலையை அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும் சிறைத்தண்டனை பெற்றார்
* காந்தியடிகள் சிறையில் வந்து பார்த்து, இவரின் மகள் அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி எனப்பெயரும் இட்டார்.
*காந்தியடிகளால் இவர் “தென்னாட்டின் ஜான்சிராணி” என அழைக்கப்பட்டார்.
அம்புஜத்தம்மாள்
*இவர் 1899ஆம் ஆண்டு பிறந்தார்.
*இவர் அன்னை கஸ்துரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
*இவர் பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
* இவர் “காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அழைக்கப்படுபவர்.
* தன் தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
* இவர் தம் எழுபதாண்டு நினைவாக, “நான் கண்ட பாரதம்” என்ற நூலை எழுதினார்.
* 1964ஆம் ஆண்டு இவருக்கு “தாமரைத்திரு”(பத்மஸ்ரீ) விருது வழங்கப்பட்டது.
1 Comments
Super sir
ReplyDeletePost a Comment